கொஞ்சி கொஞ்சி
கிறங்கடித்தாய்
என் நெஞ்சம் முழுதும்
நிறைந்திருந்தாய்
பாடி பாடி
பார்த்தேன் உன்னைப் போல
புன்னகை மட்டும்
புலப்படவில்லை
உன் கானம்
கேட்டுக் கேட்டு
பக்தன் ஆனேன்
ஆலங்கட்டி மழை போல
கரைந்துத்தான் போனேன்
நீ மீள்வாயென
நிமிர்ந்துயிருந்தேன்
நீ மாண்டாய்யெனவுடன்
நான் மிரண்டுதான் போனேன்
மனதுக்குள் சுக்கு நூறாகி
உடைந்துதான் போனேன்
அன்பு கலந்த பண்போடு
வாழ்ந்தாய்
நெஞ்சம் திளைக்க
புகழோடு சென்றாய்
தேகம் மட்டும்தான் மண்ணுக்குள்
நீ பாடிய பாடல் எல்லாம்
என் நெஞ்சுக்குள்
கருத்துரையிடுக
0 கருத்துகள்