காதலுக்கு கண்யில்லை
கண்டவுடன் காமத்திற்கு
தடையில்லை
கொஞ்சி கொஞ்சியே
கவிதை பாடி
கவர்ந்திழுத்தாய்
கெஞ்சி கெஞ்சியே
குரல் ஒலியில்
கடிதம் எழுதினாய்
கட்டுடலை காண்பித்து
கட்டிலிக்கு அழைத்தாயே
காம தீ வளர்த்து
மோகத்தில் ஆழ்த்தினாயே
எதிர்காலம் நீயென நம்பி
என்னுடலை தாரை வார்தேன்
உன்னுடனே உறவையும் வளர்த்தேனே
தேனே மானே கரும்பே பசுமையேயென
ஏகமாய் வருணித்துயிருந்தாய்
ஏழு ஸ்வரமே
எட்டாத மாங்கனியே
மயக்கும் என் பூங்கொடியே
என எனை
பாடலில் போற்றியிருந்தாய்
நான் பஞ்சு நீ நெருப்பு என்றாயே
உன்னையே நான்பற்றிக் கொண்டனே
உள்ளத்திலும் உன்னையே
உயர்வாய் உயர்த்திருந்தேனே
உற்சாகம் குறையாமல்
உன் முகம் வாடாமல்
உனதருகில் உறைந்திருந்தேனே
உனை நினையாமல் ஒரு நாளும்
உண்பதுமில்லை
உறங்கியதுமில்லை
உனது பெயரை
உச்சரிக்க
மறந்ததுமில்லை
ஊரார் உறவார் தவறாகப் பேசினாலும்
உளறல் என உதறி
உனை உதறாமல் உயர்த்தியே
உள்ளத்தில் வைத்தேனே
உச்சி முதல் பாதம்வரை
உன் பெயரை வடித்தேனே
உனதுருவம் கண்டால்
எனதுள்ளம் கசிந்துருகுமே
ஆடி முடிஞ்சதும்
ஆவணியிலே கல்யாணம்
கல்யாணம் முடிஞ்சதும்
தேனியிலே கொண்டாட்டம்ன்னு
உற்சாகத்தில் முழங்கினாயே
ஊர் முழுக்க உளறினாயே
முந்தானையில் முடிந்திருந்தேன்
முடிச்சு அவிழ்த்து
மூவுலகு சென்றாயோ
சொல்லாமலே காணாமல் போனாய்
உனை காணாமலே
உணர்விழந்து போனேனே
தண்ணீரும் பருகாமல்
தவித்திருந்தேனே
தவிர்க்க இயலாது உனை
தத்தளிக்கும் மனதை
தவிக்க விட்டுச் சென்றாயே
தாவி வந்து தாங்குவாயா
உனை மறக்க மனமேது
நீதான் வேரென்று
நான்தான் மரமென்று
உறுதியாய் நின்றிருந்தேனே
நீ வேறு நான் வேறு என
வேரோடு வீழ்ந்தாயோ
விபரீதம் புரியாமல்
விண்ணுலகம் சென்றாயோ
அகால மரணம்
ஆபத்தாய் முடிந்ததே
அதிர்ந்துதான் போனேன்
விழி பிதுங்கி வழி தெரியா
மதி சிதைந்து நடைபிணமாய்
மேலும் கவிதைகள் படிக்க
இங்கே சுட்டவும்
கருத்துரையிடுக
0 கருத்துகள்