Type Here to Get Search Results !

மூப்பில்லா தமிழே தாயே பாடல் வரிகள்

மூப்பில்லா தமிழே தாயே பாடல் வரிகள் 

href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy874m3O6W_Ha_MjJ3OQfgHbQKMTe5yBU4E_DYyATOj5YBuG-ir9VSkrXrOeDQQ3IlboYqLN9aEFavTU5PrdvCLwnShxMOPXNvOAG1x801ELMX7o85-cg_Sxz1qL_VRhtvFYY_TDiBBI1-95dJouPTqsSEzfyYKV6RRBP458fiRtcHePcgD-DX4Vuz/s3096/moopillaa%20sakthi%20accamillai.webp-1.webp" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;">மூப்பில்லா தமிழே தாயே
MOOPPILLA THAMIZHEY THAAYEY

 

புயல் தாண்டியே விடியல் !
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா ...
தரனியாளத்
தமிழே வா ... !

விழுந்தோம் முன்னம் நாம் ...
எழுந்தோம் எப்போதும் !

பிரிந்தோம் முன்னம் நாம் ...
இணைந்தோம் எப்போதும் !

திசையெட்டும் தமிழே எட்டும் ...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !

திசையெட்டும் தமிழே எட்டும் ...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும் !
புறம் என்றால் போராய்ப் பொங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !

உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய்த் தமிழே கரையும் !
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும் !

கொடைவள்ளல் எழுவர் வந்தார் ...
கொடை என்றால் உயிரும் தந்தார் !
படைகொண்டு பகைவர் வந்தால் ...
பலபாடம் கற்றுச் சென்றார் !

மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார் !
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார் !

அன்னைக்கும்அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

அன்னைக்கும்அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

உதிர்ந்தோம் முன்னம் நாம் ...
மலர்ந்தோம் எப்போதும் !

கிடந்தோம் முன்னம் நாம் ...
கிளைத்தோம்எப்போதும் !

தணிந்தோம் முன்னம் நாம் ...
எரிந்தோம் எப்போதும் !

தொலைந்தோம் முன்னம் நாம் ...
பிணைந்தோம் எப்போதும் !

விழுந்தோம் முன்னம் நாம் ...
எழுந்தோம் எப்போதும் !

அன்னைக்கும்அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

 தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று !
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று !...

காலங்கள் போகும்போது
மொழி சேர்ந்து முன்னால் போனால்
அழிவின்றித் தொடரும் என்றும் !
அமுதாகிப் பொழியும் எங்கும் !

விஞ்ஞானத் தமிழாய் ஒன்று ...
வணிகத்தின் தமிழாய் ஒன்று ...
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து !

மைஅச்சில் முன்னே வந்தோம் !
தட்டச்சில் தனியே நின்றோம் !
கணினிக்குள் பொருத்திக் கொண்டோம் !
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம் !

உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம் !
உள்வாங்கி மாறிச் செல்வோம் !
பின்வாங்கும் பேச்சே இல்லை ...
முன்னோக்கிச் சென்றே வெல்வோம் !

புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்...
ஆடைகள் அணியும் புதிதாய் !

எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே வா வா ...!
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வா வா வா வா ...!

 அன்னைக்கும்அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

பழங்காலப் பெருமை பேசி ...
படிதாண்டா வண்ணம் பூசி ...
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே ...!
நீ சீறி வா வா வெளியே !

வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில் !
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல் சொல் சொல் சொல் ...!

சென்றிடுவோம் எட்டுத் திக்கும் ...
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம் ...
இருக்கைகள் தமிழ்க்கு அமைப்போம் ...!
ஊர் கூடித் தேரை இழுப்போம் !

மொழியில்லை என்றால் இங்கே ...
இனமில்லை என்றே அறிவாய் !
விழித்துக்கொள் தமிழா முன்னே ...!
பிணைத்துக்கொள் தமிழால் உன்னை ...!

தமிழ் எங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று !
உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று !!!...

அன்னைக்கும்அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

புயல் தாண்டியே விடியல் !
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா ...
தரனியாளத்
தமிழே வா ... !

 

மூப்பில்லா தமிழே தாயே (தமிழ் கீதம்)

இசைஅமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான்

பாடலாசியர் : தாமரை




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad