Type Here to Get Search Results !

பழைய சாதம்


பழைய சாதம்
பழைய சோறு 

பழைய சோற்றின் மகத்துவம்.
கியாஸ்  அடுப்பும், குக்கர் சோறும் வந்தபின்னர், பழைய சோறு சாப்பிடுவதே நமக்கு மறந்து விட்டது.குழந்தைகளுக்குப் பழைய சோறு கொடுப்பதையே குற்றமாகக் கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால், பழையசோற்றில் நோய் எதிர்ப்புசக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவிலிருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்குக் குடியேறிய நம்மவர்கள்  சிலர், தங்களின் இளமைக் காலத்தில் சாப்பிட்ட வஉணவுகள் குறித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது. அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆராய்ச்சியில் இறங்கினர்.
அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழுத்தியது.

முதல்நாள் சோற்றில் நீருற்றி, மறுநாள் சாப்பிடும் இந்தப் பழைய சாதத்தில்  பி6, பி12   வைட்டமின்கள் ஏராளமாகஇருந்துள்ளது. உடலுக்கு, குறிப்பாகச் சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டிரியாஸ் (கவனியுங்கள் மில்லியன் அல்ல  ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம் !

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்புசதி அபரிமிதமாகப் பெறுகிறதாம். அப்புறம் பன்றிக்காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

காலைச் சிற்றுண்டியாகப் பழைய சாதத்தை சாப்பிடுவதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டிரியாக்கள் அதில் உருவாகின்றன.

மறுநாள் இதைச் சாப்பிடும்போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலைச் சீராக இயங்கச் செய்கிறது.

ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, கொழுப்புச் சத்து குறைந்துள்ளது.உடலுக்கு அதிகமான  சக்தி யைத்தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு  சக்திஅதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில் கூட வராது.

இப்போதைய நிலையில், பிரவுன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டுச் சுத்தமான தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, “மோர் “சிறிது சேர்த்து, “சின்னவெங்காயம்” சேர்த்து சாப்பிட்டால் போதும்.ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும்.
 

நன்றி மேற்கண்ட கருத்துகள் 26-01-2013-ன்று வெளியான தினத்தந்தியில்
 
“ தினம் ஒரு தகவல் பகுதியில் வெளியானவை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad